Skip to main content

Posts

Showing posts with the label eyes

உன்னைத் தேடும் கண்கள்

நீ வருவாய், நீ வருவாய், உனை நினைத்து ஏங்கும் கண்கள் கடற்க்கரை நாடும் அலைகளைப்போல் உனைத் தேடும் கண்கள் மணத்தில் மயங்கி, மலரைத் தேடிக்கொண்டு இங்கும் அங்கும் அலையும் ஒவ்வொரு பட்டாம்பூச்சிப்போல் உனைத் தேடும் கண்கள் மலை இறங்கி, நிலம் தாண்டீ, கரை எங்கே கரை எங்கே கடலைத் தேடீக்கொண்டு ஓடும் ஆறுபோல் உனைத் தேடும் கண்கள் கடலிருந்து காற்றை வ்ழி கேட்டு, வானை வழி கேட்டு, புவியை தேடி வரும் கார்முகில்போல் உனைத் தேடும் கண்கள் ஆயிரம் ஆண்டு ஒரே வேட்கையில் தனை எரித்துக்கொண்டு ஆதவனைச் சுற்றி வரும் வால்மீன்போல், உனைத் தேடும் கண்கள் உனை புகழ சொல் இல்லாமல் இருக்கிரான் 'வழிப்போக்கன்', கண்ண்னைத் நாடி பாடிய மீராப்போல், உனைத் தேடும் கண்கள் Published in Amaravati Poetic Prism 2016 ed. Padmaja Iyengar, Cultural Centre of Vijayawada & Amaravati